2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மருதனார்மடம் சந்தையில் வெள்ளம்; பொதுமக்கள் சிரமம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 10 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

மருதனார்மடம் சந்தையில் தேங்கும் வெள்ளத்தினால் சந்தைக்குச் செல்லும் பொதுமக்கள் பலரும் பல்வேறு சிரமங்களுக்குள்ளானபோதிலும், பிரதேசசபை அசமந்தப்போக்கில் செயல்படுவதாக பொதுமக்களும் விவசாயிகளும் விசனம் தெரிவித்தனர்.


இணுவில் மருதனார்மடம் சந்தையில் தேங்கும் வெள்ளத்தினால், பொருட்கள் கொள்வனவு செய்யச் செல்லும் பொதுமக்கள் முதல் விவசாயிகள் வரை பல்வேறு சிரமங்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.


இதனையிட்டு பல இலட்சம் ரூபாய்க்கு  குத்தகைப் பணமாக பெற்று சந்தையை வாடகைக்கு விட்டுள்ள சுன்னாகம் பிரதேசசபையோ அன்றி குத்தகைக்கு எடுத்தவர்களோ கூட கவனம் எடுக்காத நிலைமை காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .