2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

யாழில் சனிக்கிழமை மின் தடைப்படும்

Super User   / 2011 பெப்ரவரி 18 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் நாளை சனிக்கிழமை பல இடங்களில் மின்சார விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் சுண்ணாக அலுவலகம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய புன்னாலைக்கட்டுவன், அச்செழு, அச்சுவேலி, இடைக்காடு, வடமராட்சி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணிவரை மின்சாரம் தடைப்படும்.

இது தவிர, கொட்டடி, நாவாந்துறை, மீனாட்சிபுரம் ஆகிய இடங்களில், காலை 8.30 முதல், மாலை 5 மணி வரையிலும், மின்விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் மார்க்கங்களில், கட்டமைப்பு பணிகளின் பொருட்டே இவ்வாறு மின்சாரம் தடைசெய்யப்படவுள்ளதாக  இலங்கை மின்சார சபையின் சுண்ணாக அலுவலகம் தெரிவித்துள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .