2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் முன்னாள் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 21 , மு.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தாஸ்,கவிசுகி)

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தின் முன்னாள் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தற்சமயம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவண்ணமுள்ளனர். மாதகல் கடற்றொழிலாளர்கள் தமது குடும்பம் சகிதம், இந்திய மீனவர்களினால் அழித்தொழிக்கப்பட்ட வலைகளை ஏந்தியவாறு மௌன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது இந்திய துணைத் தூதுவர் எஸ்.மகாலிங்கத்திடம், யாழ். மாவட்ட கடற்றொழில் தலைவர்களுடன் இணைந்து மாதகல் பங்குத்தந்தை ஆனந்தகுமார்  மகஜரொன்றை கையளிக்கவுள்ளதாகவும் தெரியவருகிறது.


You May Also Like

  Comments - 0

  • xlntgson Monday, 21 February 2011 05:01 PM

    முன்னாள் மீனவர்கள் இந்நாளில் என்ன செய்கின்றனர், அரசியல் புரிகின்றனர்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .