2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வலிகாமம் பகுதியில் மின்வெட்டு; பொதுமக்கள் சிரமம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 21 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வலிகாமம் பகுதியில் மீண்டும் முன்னறிவிப்புகள் எதுவுமின்றி மின்வெட்டு இடம்பெறுவதால் பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு வார காலத்திற்;கு மேலாக இத்தகைய மின்வெட்டு திடீர்த் திடீரென்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்கெனவே வீதி அகலிப்பு நடவடிக்கை காரணமாக பகல்நேர மின்வெட்டை அறிவிக்கும் இலங்கை மின்சார சபையினர், ஏனைய மின்வெட்டு நேரங்களை அறிவிக்காது மின்வெட்டை மேற்கொள்கின்றனர்.

மாலை வேளைகளிலும் மற்றும் அதிகாலை வேளைகளிலும் இத்தகைய மின்வெட்டு இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .