2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். ஊர்காவற்றுறைப்  பகுதியிலுள்ள பாலடைந்த கிணற்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம்  இன்று வியாழக்கிழமை அதிகாலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.

மிகவும் பழுதடைந்த சடலத்திலிருந்து துர்நாற்றம் வீசியதினால் அயலவர்கள் அப்பகுதி; இராணுவத்தினருக்கு வழங்கிய தகவலையடுத்து,  இச்சடலம்  மீட்கப்பட்டுள்ளதாக யாழ். ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

பையொன்றில் பொதி செய்யப்பட்ட சடலம்  யாழ். ஊர்காவற்றுறை அரசினர் வைத்தியசாலையில் தற்போது  வைக்கப்பட்டுள்ளது.

சடலம் அடையாளம் காணமுடியாதவாறு சிதைவடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .