2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலின் பிரதம குருக்கள் காலமானார்

Super User   / 2011 மார்ச் 04 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலின் பிரதம குருக்களும் மாவை ஆதீனக் கர்த்தாவுமான ஸ்ரீ சு.சண்முகநாதக் குருக்கள் இன்று வெள்ளிக்கிழமை  இரவு காலமானார்.

அவர் கடந்த ஒருவார காலமாக சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் யாழ் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு கல்விமான் என்பதுடன் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், மற்றும் சிங்கள மொழிகளில் புலமை பெற்றவராகவும் இந்து மதக் கோட்பாடுகளில் பாண்டித்தியம் பெற்றவராகவும் விளங்கியராவார்.

அவரின பூதவுடல் மாவிட்டபுரத்திலுள்ள அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாவிட்டபுரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0

  • Rajeswary Luxmikanthan Saturday, 05 March 2011 09:17 AM

    Our deepest condolences and our prayers for his athma shanti.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .