2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யாழ். சாட்டியில் புதிய அந்தியேட்டி மடம்

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். வேலணை சாட்டியில் இந்துக்கள் அந்தியேட்டிக் கிரியைகள் செய்வதற்கு வசதியாக வேலணைப் பிரதேச சபையால் புதிய அந்தியேட்டிமடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அந்தியேட்டிக் கிரியைகள் செய்வதற்கு இதுவரைகாலமும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். இதனைக் கருத்திற்கொண்டு வேலணை பிரதேச சபையால் புதிய அந்தியேட்டி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அந்தியேட்டி மண்டபத்தில் கிரியைகளைச் செய்ய விரும்புபவர்கள் மூன்று தினங்களுக்கு முன்னர் அலுவலக நாட்களில் பிரதேச சபை அலுவலகத்துடன் தொடர்புகொள்ளுமாறு வேலணை பிரதேச சபை செயலாளர் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .