2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழ். இந்துக் கல்லூரி ஆசிரியை தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்பு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

காணாமல் போன யாழ். இந்துக் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியையொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியை கடந்த ஒரு வாரகாலமாக காணாமல் போன நிலையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் யாழ். பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தார்.

யாழ். சில்லாலையை சேர்ந்த செல்வராஜா அனுஷா (வயது 27) என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

இவருடைய மரணத்தில் சந்தேகம் கொண்ட பெற்றோர், உடம்பில் கீறல்க் காயங்கள் காணப்படுவதால் இவரை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு  யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி எஸ்.ரூபனிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .