2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை கௌரவிக்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 ஜூன் 13 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதற்பெண் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தை பாராட்டி கௌரவிக்கும் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சாவகச்சேரி சிவன்கோவில் வீதியில் உள்ள தென்மராட்சிக் கலைமன்றக் கலாமண்டபத்தில் நடைபெற்றது.

அதிபர் இ.கையிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, 'வசந்தம்' என்ற சிறப்பு மலரை அரச அதிபர் இமெல்டா சுகுமார் வெளியிட்டு வைக்க முதற் பிரதியை பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் பெற்றுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .