2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழ். குடாக்கடல் நீரேரியில் அதிகளவான கடல் அட்டைகள் பிடிப்பு

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 16 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாக்கடல் நீரேரிப்பகுதியில் அதிகளவான கடல் அட்டைகள் பிடிக்கப்படுவதாக குடாக்கடல் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காலநிலை மாற்றம் காரணமாக கடல் நீரோட்டத்தில் ஏற்பட்ட சீரான காலநிலையே அதிகளவான கடல் அட்டைகள் பிடிபடுவதற்கு காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு நாளைக்கு சுமார் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கடல் அட்டைகள் பிடிக்கப்படுவதாகவும் அந்த கடல் அட்டைகள் பதப்படுத்தப்பட்டு தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குறுகிய காலத்திற்குள் பெருமளவான கடல் அட்டைகள் பிடிக்கப்படுவதாகவும் கடல் நீரோட்டத்தில் மாற்றம் ஏற்படுமாயின் கடல் அட்டைகள் குறைவடைந்து விடும் என தெரிவித்துள்ளனர்.

இந்த கடல் அட்டைகள் பிடிக்கப்படுவதன் காரணமாக யாழ்.குடாக்கடல் கடற்றொழிலாளர்களின் குடும்ப பொருளாதார வாழ்வில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கடற் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X