2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஊர்காவற்றுறையில் சடலம் மீட்பு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 04 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ். ஊர்காவற்துறை தம்பாட்டிப் பகுதியில் உடற்பாகங்கள் சிதைவுற்ற நிலையில் சடலம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் எனவும் இனம் காணமுடியாதவாறு சடலம் சிதைவடைந்து காணப்படுவதாகவும் ஊர்காவற்துறைப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது சடலம் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஊர்காவற்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .