2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

குரும்பசிட்டியில் மீள்குடியேற்றம்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். தெல்லிப்பளைப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட குரும்பசிட்டிக் கிராமத்தில் இன்று வியாழக்கிழமை மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். குரும்பசிட்டிக் கிராமத்தில் 5 கோயில்கள் ஒரு பாடசாலை உள்ளடங்களாக 200 ஏக்கர் பரப்பளவில் 250 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த மீள்குடியேற்ற நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. இதில் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் த.முரளிதரன் மற்றும் கிராம சேவையாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • A.Mathimakan Friday, 07 October 2011 05:57 PM

    மிகவும் நல்ல விடயம். பாராட்டுக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .