2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய பரிபாலனசபைத் தலைவருக்கு பாராட்டு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 10 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தினால் கலாநிதிப்பட்டம் வழங்கப்பட்டமைக்காக தெல்லிப்பளை ஸ்ரீதுர்க்கையம்மன் ஆலய பரிபாலனசபைத் தலைவரும் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அதிபருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகனை பாராட்டும் வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய மண்டபத்தில் சபையின் உபதலைவர் சி.அருளானந்தம் தலைமையில் பாராட்டும் வைபவம் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் கலந்துகொண்ட கல்விமான்கள், மாணவர்கள் உட்பட பலரும் பொன்னாடைகள் போர்த்தியும் வாழ்த்துப் பாக்களை பாடியும் மலர்மாலைகள் அணிவித்தும் கலாநிதி ஆறுதிருமுருகனை கௌரவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X