2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

யாழ். பொலிஸாரின் ஏற்பாட்டில் மாபெரும் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 13 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் மாபெரும் நடமாடும் சேவை வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் நாளைமறுதினம் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பெறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.

இந்த நடமாடும் சேவையில் பிறப்பு, இறப்பு பதிவு சான்றிதழ் வழங்குதல் மற்றும் வைத்திய சேவைகளான பல் மருத்துவம், இரத்ததானம், கண் பரிசோதித்து கண்ணாடி வழங்குதல் போன்றனவும் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நடமாடும் சேவையில் பங்குபற்றி பயனடையுமாறு பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X