2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழ். குருநகரில் மற்றுமொரு சிறுவர் நீதிமன்றம் திறக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 15 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இலங்கையின் இராண்டாவது சிறுவர் நீதிமன்றம் யாழ்ப்பாணம், குருநகர்ப் பகுதியில் நாளைமறுதினம் வியாழக்கிழமை பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக யாழ். நீதிமன்றப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது ஒரு சிறுவர் நீதிமன்றம் மாத்திரமே  பத்தரமுல்லையில் இயங்கி வருகின்றது. இந்த  நிலையில்  யாழ்ப்பாணம் குருநகரிலுள்ள பழைய நீதிமன்ற வளாகத்தில் இரண்டாவது  சிறுவர் நீதிமன்றம் இயங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.  

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்து கொள்ளவுள்ளதுடன், யாழ். மாவட்ட நீதித்துறை சார்ந்தவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .