2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வாகன விபத்தில் பெண் பலி

Kogilavani   / 2011 நவம்பர் 16 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)
தென்மராட்சியில் இன்று புதன்கிழமை  இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது கணவர் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற வாகனமும் பிக்கப் வாகனம் ஒன்றும் மோதிக்கொண்டதில் மேற்படி விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் பிக்கப் வாகனத்தில் பயணித்த பெண் உயிரிழந்துள்ளதுடன் அவரது கணவர் பலத்த காயங்களுக்குட்டபட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இவ்விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .