2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர், யுவதிகள்; யாழில் தேர்வுகள் ஆரம்பம்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 28 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கவிசுகி)

யாழில் தமிழ் இளைஞர், யுவதிகளைப் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான தேர்வுகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இதற்கான தேர்வு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

உதவிப் பொலிஸ் பரிசோதகர், கான்ஸ்டபிள் ஆகிய பதவிகளுக்கு இளைஞர் யுவதிகளை இணைப்பதற்கான நேர்முகத் தேர்வுகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாளையும் நாளை மறுதினமும் தேர்வுகள் நடத்த ஏற்பாடாகியுள்ளன.

இலங்கைப் பொலிஸ் சேவையில் இணைந்துகொள்ள விரும்பும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அனைத்து இளைஞர், யுவதிகளும் இந்த நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • Ambiga Monday, 28 November 2011 09:31 PM

    பொலிஸ் அதிகாரியானபின், பெண்களிடம் வம்பிழுப்பவர்களை ஒருகை பாருங்கள்.

    Reply : 0       0

    ala Tuesday, 29 November 2011 12:16 AM

    மக்களுக்கு சேவை சேவை செய்ய முன்வாருங்கள் இவை கிழக்கிலும் நடக்கட்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X