2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழ். மாநகர ஆணையாளராக ஜெயகரன் நியமனம்

Super User   / 2012 ஒக்டோபர் 10 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளராக யாழ். மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளராக கடமையாற்றி ஜெயகரன் நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபை தெரிவித்துள்ளது.

இதுவரை காலமும் ஆணையாளராக கடமையாற்றி பிரணவநாதன் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்தே புதிய ஆணையாளராக ஜெயகரன் நியமிக்கப்பட்டுள்ளார் .

அத்துடன் மாநகர சபையின் செயலாளர் ஓய்வு பெற்றுச் செல்வதால் மாநகர சபையின் புதிய செயலாளராக நிர்வாக உத்தியோகஸ்தராக கடமையாற்றிய தர்மரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகர சபை அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .