2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கொடுப்பனவு வழங்காமையினால் பணியாளர்கள் போராட்டம்

Super User   / 2012 நவம்பர் 21 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

உலக வங்கியின் நிதியுதவியுடன் சீரா நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகின்ற வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபடுகின்ற பணியாளர்களுக்கான இரண்டு மாத கொடுப்பனவு வழங்கப்பாடமையை எதிர்த்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பணியாளர்களிடம் கேட்டபோது,

"கடந்த செப்டம்பர் மாத்திற்கு பின்னர் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கு இதவரை கொடுப்பனவு வழங்கப்படவில்லை. கடந்த தீபாவளி தினத்திற்கு முன்னர் கொடுப்பனவு வழங்கப்படும் என்று குறித்த நிறுவத்தின் தொழில்நுடபவியலாளாரால் வாக்குறுதியளித்த போதும் இதுவரை கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்று பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால் குறித்த நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் தங்கள் கொடுப்பனவுகளை வழங்குமாறு வலியுறுத்தி அலுவலகத்திற்கு முன்னால் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X