2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

யாழ். தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனம்: ஜனாதிபதியுடன் விரைவில் சந்திப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 22 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                   (சுமித்தி)
யாழ். மாவட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் குறித்து அடுத்த மாதம் ஜனாதிபதியுடன் சந்தித்த கலந்துரையாடவுள்ளதாக யாழ். தொண்டர் ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று வியாழக்கிழமை தெரிவித்தனர்.

நிரந்தர நியமனம் குறித்து கல்வி அமைச்சுடன் பல்வேறு போராட்டங்களை நடாத்தி தோல்வி கண்ட நிலையில், ஜனாதிபதியுடன் சந்தித்து கலந்துரையாடவுள்தாக சங்கத்தினர் கூறினர்.

யாழ். மாவட்டத்தில் 107 தொண்டர் ஆசிரியர்கள் தொழில்நுட்பம் மற்றும் வேறுதுறைகளில் பட்டப்படிப்பு   முடித்து தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் குறித்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

ஜனாதிபதியுடன் சந்தித்து கலந்துரையாடுவதனூடாக  நிரந்தர நியமனம் கிடைக்கும் வாய்ப்புக்கள் கிடைக்குமென எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் யாழ். மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத்தினர் மேலும் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .