2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மீன்பிடி செயற்பாட்டு மையக் கட்டிடம் திறப்பு

Super User   / 2012 டிசெம்பர் 10 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)


யாழ். கீரிமலை செந்தாங்குளம் பகுதி மீனவ குடும்பங்களுக்கு 87,000 அமெரிக்க டொலர் நிதியில் படகுகள் மற்றும் மீன்பிடி செயற்பாட்டு மையக் கட்டிடம் ஆகியன இன்று திங்கட்கிழமை கையளிக்கப்பட்டன.

ஜ.ஓ.எம் நிறுவனத்தின் அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட மீன்பிடி செயற்பாட்டு மையக் கட்டிடத்தினை அவுஸ்திரேலியா எய்டின் அபிவிருத்தி திட்ட இணைப்பாளர் எட்வேர்ட்  அர்ச்பல்ட் மற்றும் ஜ.ஓ.எம் நிறுவனத்தின் பிரதம அதிகாரி ரிசார்ட் டான்சியர் ஆகியோர் திறந்துவைத்தனர்.

செந்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த 117 குடும்பங்களின் வாழ்வாதாரத்தினையும் மேம்படுத்தும் நோக்கத்துடனும் மீன்பிடி செயற்பாட்டு மையக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த செயற்பாட்டு மையம் தினசரி மீன் விற்பனைக்கும், மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைப்பதுடன், இதன் ஒரு பகுதியில் மீன்பிடி படகுகள் மற்றும் இயந்திரங்கள், வலைகள் திருத்துவதற்குமாக அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொது நோக்கு மண்டபம், நூல் நிலையம், சுகாதார நிலையம் மற்றும் முன்பள்ளி நிலையம் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X