2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வைத்தியர் நிபுணர் மீதான வாள் வெட்டு தொடர்பில்: சந்தேகத்தில் ஒருவர் கைது

Kanagaraj   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் காது,மூக்கு மற்றும் தொண்டை தொடர்பிலான சத்திரசிகிச்சை நிபுணர் திருமாறன் மீது  வாள் வெட்டு மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர் மீதான வாள்வெட்டு சம்பவம் கந்தர்மடம் சந்தியில் கடந்த 20 ஆம் திகதி  வியாழக்கிழமை இரவு 9.45 மணியளவில் இடம்பெற்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் ஒருவரையே பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கையில் வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையிலேயே  சத்திரசிகிச்சை நிபுணர் திருமாறன்; யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .