2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கஜேந்திரகுமாரை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் அழைப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 28 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

கஜேந்திரகுமாரை நாளை சனிக்கிழமை விசாரணைக்கு சமூகம் தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் வெளிநாடு சென்றுள்ளதால் நாடு திரும்பியவுடன் விசாரணைக்கு செல்வார் என்றும் செல்வராசா கஜேந்திரன் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X