2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வைத்தியர் மீதான தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு பொலிஸார் வலைவீச்சு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 28 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

புற்றுநோய் வைத்திய நிபுணர் என்.ஜெயக்குமார் வீட்டின் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கு சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெப்ரி தெரிவித்தார்.

இந்த தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் அத்தியட்சகர், வைத்தியர்கள் மீதான தாக்குதல்களை மேற்கொள்பவர்களை இணங்காட்ட சிலர் தயங்குவதாகவும் கூறினார்.

எவ்வாறாயினும் துரிதமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .