2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிசுவின் சடலம் மீட்பு; பெற்றோரை தேடி வலைவிரிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 22 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். வட்டுக்கோட்டை தெற்கு பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து ஆண் சிசு ஒன்றின் சடலத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை  பொலிஸார் மீட்டுள்ளனர்.

இச்சடலத்தை பார்வையிட்ட மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி உடற்கூற்று பரிசோதனைக்காக சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சடலமாக மீட்கப்பட்ட இச்சிசுவின் பெற்றோரை கண்டுபிடிக்குமாறும் மல்லாகம் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார்  தெரிவித்தனர்.

அத்துடன், சிசுவின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் துரித விசாரணை மேற்கொள்ளுமாறும் வைத்தியசாலைகளில் கடந்த வாரத்தில் பிறந்த குழந்தைகளின் விபரங்களை திரட்டுமாறும் மல்லாகம் நீதிமன்ற நீதிபதி வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்கப்பட்ட சிசுவின் உடல்கூற்று பரிசோதனை தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் வினவியபோது, சடலமாக மீட்கப்பட்ட ஆண் சிசு பிறந்து 3 நாட்கள் ஆகியிருக்கின்றன என்றும் சிசுவின் தொப்புள் கொடியில் கிளிப் காணப்படுவதால்;, ஏதோ ஒரு வைத்தியசாலையில் பிறந்திருக்கலாம், அல்லது குடும்ப நல உத்தியோகத்தர்கள் மூலம் பிரசவிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பெற்றோர்களின் விபரங்களை இணங்காணப்பட்ட பின்னரே சிசுவின் சடலம் உடல்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .