2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பேஸ் புக்கில் ஆசிரியர்களின் முகங்களை மாற்றி பதிவேற்றம்: மாணவனுக்கு எதிராக விசாரணை

Kogilavani   / 2013 ஜூலை 25 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

பேஸ் புக்கில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் முகங்களை மாற்றி அவர்களின் படங்களை பதிவேற்றம் செய்த மாணவனுக்கு எதிராக விசாரணை நடைபெற்றுவருவதாக அந்த பாடசாலையின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், அதிபர் தன்னை தாக்கியதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மாணவர் ஒருவர் முறைபாடு செய்துள்ளார். அத்துடன் அந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென்மராட்சி வலய பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயத்தினை அறிந்து கொண்ட ஆசிரியர்கள் மாணவனை அழைத்து இவ்வாறு தவறு செய்யக் கூடாது என கண்டித்துள்ளனர். இதனையடுத்தே அந்த பாடசாலை நிர்வாகத்திற்கு எதிராக மாணவன் முறைப்பாடு செய்துள்ளதாகவும் மாணவனை எந்தவொரு ஆசிரியரும் தாக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .