2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மீளக்குடியேறும் பிரதேசங்களில் வீதி விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை

Super User   / 2013 ஓகஸ்ட் 04 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா  

தெல்லிப்பளை பிரதேச சபையினால் மீளக்குடியேறும் பிரதேசங்களில்  கடந்த மாதம் மாத்திரம் நூற்றுக்கு மேற்பட்ட வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது என பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தெவிவித்தார்.

மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட கட்டுவன், சிந்திப்பந்தி, இளவாலை மற்றும் குளமங்கால் ஆகிய பகுதிகளுக்கு இந்த வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சபையின நிதியின் மூலம் கட்டம் கட்டமாக சுமார் 1,200க்கு மேற்பட்ட வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் வீதி விளக்குகள் இல்லாத இடங்களுககு பொருத்துவதறக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X