2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான கருத்தரங்கு யாழ். மானிப்பாய் சாவற்காடு பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கினார்.
இதன்போது உரையாற்றிய அவர்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை மிகப் பெரும்பான்மையாக வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்திப் பேசியதுடன், வட மாகாணசபைத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதிசெய்ய வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இக்கருத்தரங்கில் வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர் கௌரகாந்தனும் கலந்துகொண்டு உரையாற்றினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .