2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

எதிர்க்கட்சித்தலைவர் பதவியை துறக்க வேண்டும்: அமைச்சர் டக்ளஸ்

Kanagaraj   / 2013 டிசெம்பர் 05 , பி.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கெலும் பண்டார எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் கொலை தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் காரணமாக தனது கட்சியை சேர்ந்த கே.கமலேந்திரனை வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை துறக்குமாறு கேட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நேற்று வியாழக்கிழமை கூறினார்.

டானியல் றெக்ஷியன்; ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியமான செயற்பாட்டாளர். இவரது கொலை தொடர்பில் கமலேந்திரன் மற்றும் கொல்லப்பட்ட றெக்ஷியனின் மனைவி ஆகியோரின் பெயர்கள் சம்பந்தப்பட்டுள்ளன என அமைச்சர் தேவானந்தா கூறினார்.

கமலேந்திரனுக்கு எதிராக குற்றச்சாட்டு உள்ளது அவர் இப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவர் கட்சியிலும் வடமாகாண சபையிலும் அவர் வகிக்கும் பதவிகள் சகலதையும் இராஜினாமா செய்யும்படி நான் அவரை கேட்டுள்ளேன். தான் குற்றமற்றவர் என நீதிமன்றில் அவர் நிரூபிப்பாராயின் அவரை திரும்பவும் சேர்த்துக் கொள்வதுபற்றி யோசிக்கலாம் என்றும் அமைச்சர் கூறினார்.

தான் ஒரு இக்கட்டான நிலையில் இருப்பதாக அமைச்சர் கூறினார். கமலேந்திரனின் பெற்றோரும் இரண்டு சகோதரர்களும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நீண்டகால ஆதரவாளர்கள் என்றும் அவர் கூறினார்.

இருப்பினும் நான் கட்சியின் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும். இவர் சகல பதவிகளையும் துறக்க வேண்டும் இல்லாதுவிடின் நான் அவரை சகல பதவிகளிலிருந்தும் அகற்றுவேன் என அமைச்சர் கூறினார்.

You May Also Like

  Comments - 0

  • kb Friday, 06 December 2013 12:25 PM

    உங்கள் மீதும் இதேபோன்ற‌ குற்றச்சாட்டு இருப்பதாக நினைவு......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .