2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தொலைபேசி திருடிய மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். மல்லாகம் சந்தியில் அமைந்துள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மூவரை எதர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் பஷPர் மொஹமெட்; திங்கட்கிழமை (31) உத்தரவிட்டார்.

யாழ்.கட்டுவானைச் சேர்ந்த 20 வயதுடைய இருவரும்; 23 வயதுடைய ஒருவருக்குமே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

'யாழ்.நகரில் அமைந்துள்ள தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் கைத்தொலைபேசிகளை விற்பதற்காக மேற்படி மூவரும் ஞாயிற்றுக்கிழமை (23) சென்றுள்ளனர்.

குறித்த நபர்கள் மீது சந்தேகப்பட்ட நிலையத்தின் உரிமையாளர் இதுதொடர்பாக யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

யாழ்.பொலிஸார் அவ்விடத்திற்குச் சென்று குறித்த நபர்களைக் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டபோது, மல்லாகம் சந்தியிலுள்ள தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் திருடப்பட்ட கைத்தொலைபேசிகளையே இவ்வாறு விற்பனை செய்யக் கொண்டு வந்தமை தெரியவந்தது.

தொடர்ந்து, யாழ்.பொலிஸாரினால் மேற்படி மூன்று நபர்களும் தெல்லிப்பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த மூவரையும் தெல்லிப்பளை பொலிஸார் கடந்த திங்கட்கிழமை (24) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய வேளை அவர்களை நேற்று (31) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

தொடர்ந்து மேற்படி வழக்கு நேற்று (31) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மூவர் சார்பாகவும் நீதிமன்றில் ஆஜராகிய சட்டத்தரணி மூவருக்கும் பிணை வழங்கும்படி மன்றில் கோரியிருந்தார்.

எனினும் அதற்கு தெல்லிப்பளை பொலிஸார் எதிர்ப்புத் தெரிவித்ததினையடுத்து குறித்த நால்வரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .