2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கம்பிகளைக் கடத்தியவர்களுக்கு விளக்கமறியலில்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 01 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -சுமித்தி தங்கராசா 

இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான அலுமினிய மின்கம்பிகளை கொழும்புக்கு கடத்திச்செல்ல முற்பட்டதாகக் கூறப்படும் இருவரை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஆ.ஆனந்தராஜா இன்று (01) உத்தரவிட்டார்.

 அராலி தெற்கைச் சேர்ந்த லொறிச் சாரதியும், பொம்மைவெளி 4ஆம் குறுக்கைச் சேர்ந்த மற்றுமொரு நபருமே யாழ். பொம்மைவெளி 9ஆம் குறுக்குத்தெருவில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (30) கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களிடம் 42 பைகளில் இருந்த 840 கிலோகிராம் அலுமினியக் மின்கம்பிகளையும் யாழ். பொலிஸார்  கைப்பற்றினர்.

 தொடர்ந்து மேற்படி நபர்கள் இருவரையும் யாழ்.பொலிஸார் இன்று (01) நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே பதில் நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X