2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விபத்தில் ஒருவர் படுகாயம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 02 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -கி.பகவான், வி.வி
[athrfd;

யாழ். சாவகச்சேரி பேரூந்து தரிப்பிடத்தில் செவ்வாய்கிழமை(1) இடம்பெற்ற   விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் புதன்கிழமை(2) தெரிவித்தனர்.

பஸ் தரிப்பிடத்தில் திரும்ப முற்பட்ட மினிபஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதியான மட்டுவில் வடக்கினைச் சேர்ந்த வைரவநாதன் மயூரன் (வயது25) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட இவர், தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார்  தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .