2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

வாள்வெட்டிற்கு இலக்கானவர் மரணம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

யாழ்.மல்லாகம் பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்கான சுன்னாகம், சூராவத்தையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தவனேஸ்வரன் நிருபன் (வயது 30) என்பவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வியாழக்கிழமை (23) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை (19) நள்ளிரவு குறித்த நபர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரண்டு நபர்களால் இவர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டது.

இதில் படுகாயமடைந்த இவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ஞாயிற்றுக்கிழமை (20) மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மல்லாகம் பகுதியில் அதேதினத்தில் மூன்று இளைஞர்கள் மீது முகங்களை துணியினால் மூடிக் கொண்டு வந்த குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த அம்மூன்று இளைஞர்களும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தெல்லிப்பழை பொலிஸாரும் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தை சேர்ந்தவர்களும் இணைந்து சித்திரைப் புத்தாண்டு இசை நிகழ்ச்சியை  மல்லாகம் மகா வித்தியாலய மைதானத்தில் சனிக்கிழமை (19) நடத்தினர். இதன்போது,  இரு குழுவினருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடே இத்தாக்குதல் சம்பவங்களுக்கு காரணமென்று தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரையிலும் கைது செய்யப்படவில்லையென தெல்லிப்பழை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளினை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .