2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இளவாலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடமாற்றம்

Kanagaraj   / 2014 ஜூலை 02 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

இளவாலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய டி.எம்.ஷிந்தக பண்டார யாழ். தலைமை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை (01) முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் ஆலோசனைகளுக்கமையவே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இளவாலைப் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக, வல்வெட்டித்துறை பிரதிப் பொலிஸ் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றி வந்த எம்.எஸ்.எம்.பீரிஷ; டவுஸ் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

இளவாலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிய கடந்த 2012 பெப்ரவரி மாதம் தொடக்கம் ஷிந்தக பண்டார கடமையாற்றி வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .