2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முகமாலையில் மேலுமொரு எலும்புக்கூடு மீட்பு

Menaka Mookandi   / 2014 ஜூலை 03 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான், சுப்பிரமணியம் பாஸ்கரன்

யாழ்., முகமாலைப் பகுதியிலிருந்து மேலும் ஒரு எலும்புக்கூடு இன்று வியாழக்கிழமை (03) காலை மீட்கப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பகுதியிலுள்ள கைவிடப்பட்ட காவலரண் ஒன்றிலிருந்து பெண் விடுதலைப் புலி உறுப்பினருடைய எலும்புக்கூடு மீட்கப்பட்ட நிலையில் இன்று (03) இரண்டாவது எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடும் பணியாளர்களே மேற்படி எலும்புக்கூடுகளை அவதானித்து, பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனால், இப்பகுதியில் மேலும் எலும்புக்கூடுகள் இருக்கலாம் என்பதினால் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களுடன் இணைந்து, தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .