2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

வாள்களுடன் இருவர் கைது

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 15 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

குழு மோதலொன்றுக்காக வாள்களை முச்சக்கரவண்டியில் கொண்டுசென்ற இரு சந்தேகநபர்களை வல்வெட்டித்துறை நகர பகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை (14) இரவு கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 22 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும் அவர்களிடமிருந்து இரண்டு வாள்கள் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேற்படி இரு சந்தேகநபர்களும் தொண்டைமானாறு பகுதியில் குழு மோதலில் ஈடுபடுவதற்கு சென்றதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரையும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .