2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழ்ப்பாணத்துக்கு மீன்பிடித் துறைமுகங்கள் அவசியம்: ந.கணேசமூர்த்தி

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 21 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

யாழ். மாவட்டத்துக்கு மீன்பிடித் துறைமுகங்கள் அவசியம் தேவைப்படுவதாக கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி இன்று செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ். மாவட்டத்தில் தற்போது பயன்பாட்டில் 48 நாட்கலங்கள் இருக்கின்றன. இருந்தும், அந்த நாட்கலங்களை மழை காலங்களிலும் மற்றைய நாட்களிலும் நங்கூரமிட்டு தரித்து வைப்பதற்கு துறைமுகங்கள் இல்லாமல் இருக்கின்றது.

துறைமுகங்கள் இல்லாத காரணத்தால் பருத்தித்துறை, மாதகல், நயினாதீவு, மருதங்கேணி ஆகிய பிரதேசங்களில் பல நாட்கலங்கள் வைத்திருக்கும் மீனவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

துறைமுகங்கள் அமைக்கும் இடங்களில் எரிபொருள் நிரப்பு நிலையம், ஐஸ் தொழிற்சாலை, போக்குவரத்து வசதிகள், விற்பனை மண்டபம் மற்றும் இளைப்பாறும் இடம் என்பனவும் இணைந்து அமைக்கப்பட வேண்டும். இதன் மூலமே மீனவர்கள் சிறந்த பயனை பெறுவார்கள்.

யாழ். மாவட்டத்தில் குருநகர், இம்பசிட்டி ஆகிய பகுதிகளில் இரண்டு துறைமுகங்கள் அமைப்பதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .