2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஊற்று விநாயகர் ஆலயத்தில் திருட்டு

Gavitha   / 2015 பெப்ரவரி 04 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி, முரசுமோட்டையில் அமைந்துள்ள ஊற்று விநாயகர் ஆலயத்திலிருந்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு பித்தளைக் குத்துவிளக்குகள் செவ்வாய்க்கிழமை (03) இரவு திருடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.


ஆலயத்தின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, இந்த குத்து விளக்குகள் திருடப்பட்டுள்ளன.


முறைப்பாட்டின் பிரகாரம் அவ்விடத்துக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .