2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கடலாமையுடன் கைதானவர்களுக்கு தண்டம்

George   / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்


கடலாமை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார், செவ்வாய்க்கிழமை (10) தீர்ப்பளித்தார்.


அவர்களிடம் உயிருடன் மீட்கப்பட்ட 3 கடலாமைகளையும் கடற்படையினரின் உதவியுடன் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் மண்டைதீவு கடலில் விடுவதுடன் இறந்த கடலாமையை புதைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்.


குருநகர் 5 மாடிக்குடியிருப்பை சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள், திங்கட்கிழமை(09) இரவு 4 கடலாமைகளுடன் கைது செய்யப்பட்டனர். அதில் ஒரு கடலாமை உயிரிழந்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .