2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இலங்கை மீனவர்கள் ஐவர் விடுதலை

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 15 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இந்திய கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கடந்த ஜூன் மாதம் கைதான இலங்கை மீனவர்கள் ஐவர், நேற்று வெள்ளிக்கிழமை (14) காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

விடுவிக்கப்பட்ட ஐவரும் புத்தளம் மற்றும் மாத்தறை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மீனவர்கள் ஐவரையும் பெறுப்பேற்றுக்கொண்ட யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள், அவர்களுக்குரிய உதவிகளை வழங்கி, அவர்களுடைய இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஐவரும் கடந்த ஜூன் மாதம் இராமேஸ்வரம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தமிழக சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .