2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வட்டுக்கோட்டை வாக்குகளை மீள எண்ணுமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 18 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் வட்டுக்கோட்டைத் தொகுதிக்கான வாக்குகளை மீள எண்ணும் நடவடிக்கைகள் இடம்பெறவேண்டும் எனக்கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றம் செல்லவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 6 வாக்குகளால் ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளதாகவும் அந்த ஆசனம் தமக்கு வரவேண்டிய ஆசனம் எனவும், வட்டுக்கோட்டை தொகுதி முடிவின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆசனம் சென்றுள்ளதாகவும் அதனை மீளவும் எண்ணுமாறு உதவித் தேர்தல் ஆணையாளரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரியிருந்தனர்.

இதனை உதவித் தேர்தல் ஆணையாளர் மறுத்திருந்த நிலையில், வட்டுக்கோட்டைத் தொகுதிக்கான வாக்குகளை மீள எண்ண வேண்டும் எனக் கோரி நீதிமன்ற உதவியை நாடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .