2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 24ஆவது வருட நினைவஞ்சலி

Kogilavani   / 2011 ஒக்டோபர் 21 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
கடந்த 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்தவேளை இந்திய   இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களின் 24 ஆவது வருட நினைவஞ்சலி இன்று வெள்ளிக்கிழமை காலை அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதி ராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, இறந்தவர்களின் புகைப்படங்களுக்கு அவர்களது உறவினர்கள் மாலை அணிவித்து தமது அஞ்சலிகலியை செலுத்தினர்.


You May Also Like

  Comments - 0

  • jampavan Saturday, 22 October 2011 12:58 AM

    தொப்புள் கோடி உறவாம், காந்தி பிறந்த மண்ணாம், இந்தியாவுக்கு சமர்ப்பணம்.

    Reply : 0       0

    ruban Saturday, 22 October 2011 02:04 AM

    எப்பதான் இந்த கொலைகளுக்கு நீதி கிடைக்குமோ ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .