2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்கள் 4பேர் நெடுந்தீவில் கரையொதுங்கினர்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 07 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா
 
இந்திய மீனவர்கள் 4பேர் இன்று (07) காலை 10.30 மணியளவில் நெடுந்தீவு கடற்கரையில் ஒதுங்கியுள்ளனர்.
 
கரையொதுங்கிய மேற்படி நான்கு மீனவர்களும் தற்போது நெடுந்தீவுப் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
 
இயந்திரக் கோளாற்றின் காரணமாக இவர்கள் வந்த படகு சேதமடைந்ததுடன், மீன்கள் பாதுகாத்து வைக்கும் பெட்டிகளின் உதவியுடன் இவர்கள் கரையினை அடைந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X