2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’இணைந்து செயற்பட வேண்டும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 13 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தமிழ் மக்களின் உரிமை சார்ந்து நடத்தப்படுகின்ற எழுக தமிழ்ப் பேரணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கலந்துகொண்டிருக்க வேண்டுமெனத் தெரிவித்த அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம், ஆகையால் அவர்கள் கலந்து கொள்ளாதது கவலையளிக்கிறதெனவும் கூறினார்.

ஆகவே, இன்னும் காலம் கடந்து போகவில்லை என்பதால் இணைந்து செயற்பட வேண்டுமெனவும், அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் தேர்தல் காரணமாக அரசியல் கட்சிகளிடத்தே முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் பொது மக்களின் பொது நலன்களின் அடிப்படையில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென்றும், அந்த வகையில் எழுக தமிழ் பேரணிக்கு தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமூக விஞ்ஞான ஆய்வு மையமும் வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழுவும் இணைந்து யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .