2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

செல்வநாயகம் கபிலன்   / 2017 ஒக்டோபர் 09 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் 10 பேரையும் இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா நேற்று  (08) உத்தரவிட்டார்.

விசைப் படகொன்றுடன் நுழைந்து மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 10 பேரை, காரைநகர் கடற்படையினர் நேற்று முன்தினம்  கைதுசெய்து நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

நீரியல்வளத்துறை அதிகாரிகள், ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதவானின் வாசஸ்தலத்தில் மீனவர்களை முற்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .