2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்கள் 12 பேர் கைதாகினர்

செல்வநாயகம் கபிலன்   / 2017 செப்டெம்பர் 12 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்பரப்பை அண்மித்த நெடுந்தீவு கடற்பரப்பினுள், எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 12 பேரை காரைநகர் கடற்படையினர் நேற்று  (11) இரவு கைது செய்துள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார். இரண்டு விசைப்படகுகளுடன் நுழைந்து மீன்பிடித்துக்கொண்டிருந்த போதே இவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்த சுதாகரன், தொடர்ந்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அவர்களை முற்படுத்தியபோது, அவர்களை 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஏ.எம்.எம். றியால் உத்தரவிட்டதாகத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .