2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இரணைமடுகுளத்தில் நீர் அதன் கொள்ளளவை அடைந்து வருகிறது

Editorial   / 2018 நவம்பர் 08 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த இரண்டு வருடங்களின் பின் கிளிநொச்சி இரணைமடுகுளத்தில் நீர் அதன் கொள்ளளவை அடைந்து வருகிறது என கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் ந.சுதாகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணிநேரத்தில் பெய்த 150 மில்லி மிற்றர் மழை காரணமாக கிளிநொச்சியில் உள்ள குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது எனவும் குறிப்பாக இரணைமடுகுளத்தின் நீரேந்து பகுதிகளில் அதிகளவு மழை காரணமாக இன்று (08) இரணைமடுகுளத்தின் நீர் மட்டம் 26.5 அடியாக காணப்படுகிறது.  மாங்குளம், கனகராயன்குளம், சேமமடுகுளம் போன்ற குளங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது எனவே அக் குளங்கள் வான்பாய்கின்ற போதும் இரணைமடு குளத்துக்கான நீர் வரவு மேலும் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடந்த இரண்டு அபிவிருத்திப் பணிகள்  இடம்பெற்று வந்த நிலையிலும் பருவ மழை போதுமானதாக இல்லாததன் காரணமாக கடந்த வருடங்களில் நீர் மட்டம் அதன் கொள்லளவை அடையவில்லை. 2016 ஆம் ஆண்டு நீர் மட்டம் 20 அடியாகவும், 2017 ஆம் 18 அடியாகவும் காணப்பட்டது. 

இரணைமடுகுளம் இதுவரை காலமும் 34 அடியாக காணப்பட்டது. தற்போது அபிவிருத்திக்கு பின் 36 அடியாக காணப்படுகிறது. இதுவரை காலமும் 1 இலட்சத்து 6 ஆயிரத்து 500 ஏக்கர் அடியாக காணப்பட்ட நீர் கொள்லளவு தற்போது  ஒரு  இலட்சத்து 19 ஆயிரத்து 500 ஏக்கர் அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் குளத்தின் நீர் மட்டம் 36 அடியாக உயரும் போது குளம் இந்த கொள்ளளவை அடையும்.

அவ்வாறு 36 அடிக்கு நீர் வந்தால் இதுவரை காலமும் இரணைமடுகுளத்தின் கீழ் சராசரி 8 ஆயிரத்து 500 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வந்த  சிறுபோக நெற்செய்கை 12 ஆயிரத்து 500 ஏக்கராக மாற்றப்படும் என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .