2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஒரே இரவில் 15 பேர் கைது

எம். றொசாந்த்   / 2018 ஜூன் 13 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வல்வெட்டித்துறை பகுதியில் குழு மோதலில் ஈடுபட்டார்கள் எனும் சந்தேகத்தில் ஒரே இரவில் 15 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வு ஒன்றினை அடுத்து இரு குழுக்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியது.

அதன்போது இரு குழுக்களையும் சேர்ந்த 15 பேர் காயமடைந்த நிலையில் ஊரணி, மந்திகை மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அந்நிலையில், குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வல்வெட்டித்துறை பொலிஸார் மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஆறு பேரை கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியதையடுத்து அவர்களை எதிர்வரும் 21 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

அந்நிலையில், குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகளை முன்னெடுத்த வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்று (12) இரவு 15 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யபட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் விசாரணைகளில் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .