2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கவனயீர்ப்புப் போராட்டம்

Editorial   / 2018 ஜனவரி 04 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற்சங்கம், வடமாகாண முதலமைச்சரின் தீர்மானத்துக்கு எதிராக, இன்று (04) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

வவுனியா பஸ் நிலையத்தில் இணைந்த சேவையை ஆரம்பிக்குமாறு, முதலமைச்சரால் வழங்கப்பட்ட உத்தரவை எதிர்த்து இ.போ.ச ஊழியர்களின் இணைந்த தொழிற்சங்கங்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக ஈடுபட்டு வந்தனர். இதன் தொடராகவே நான்காவது நாளில் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

போக்குவரத்து சேவையின் கொழும்பிலிருந்து வருகை தந்த உயர் அதிகாரிகளுடன் வடமாகாண முதலமைச்சர் மற்றும் தனியார் பஸ் சேவை சங்கத்தினர் நேற்று  (03) கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

இதனடிப்படையில், தற்காலிக முடிவுகள் எட்டப்பட்டுள்ளது எனவும் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் எனவும் அறிவிக்கப்பட்டது.

எனினும், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்து, இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற்சங்கம் இன்று (04) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .