2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சாரதி தாக்கப்பட்டமையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 மே 17 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய பண்டிவிருச்சான் பிரதேச வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டி சாரதி ஒருவரை கடந்த திங்கட்கிழமை மாலை கடமை நேரத்தில் இனம் தெரியாத மூவர் தாக்கிய சம்பவத்தை கண்டித்து இன்று (17) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் கண்டன போராட்டம் மற்றும் பணிப்பகிஸ்கரிப்பு இடம்பெற்றது.

மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய பண்டிவிருச்சான் பிரதேச வைத்தியசாலையில் நீண்ட காலமாக அம்புலன்ஸ் வண்டி சாரதியாக கடமையாற்றும் ராஜேந்திரன் சற்குணராசா (வயது-37) என்பவரை கடந்த 14 ஆம் திகதி மாலை கடமை நேரத்தில் வைத்தியசாலை வளாகத்தில் வைத்து இனம் தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த சம்பவத்தை கண்டித்து மன்னார் மாவட்ட அரச சுகாதார சேவைகள் சாரதிகள் சங்கம் மற்றும் சுகாதார சேவைகள் சங்கம் ஆகியவை இணைந்து குறித்த ஒரு மணி நேர அடையாள பணிப்பகிஸ்கரிப்பையும், எதிர்ப்பையும் மேற்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .